விநாயகர் ஸ்லோகங்கள்
சுக்லாம்பர தரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப் புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
கஜா நநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச் வர பாத பங்கஜம்
திருமந்திரம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின் றேனே
மூஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித சூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ
“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.”
11 ஆம் திருமுறை
திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பேருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக எனவினை கடிதேகும்.
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தரவா தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம்
நாதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம்.
ஸ்ரீ கணேச காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
No comments:
Post a Comment