Sunday, September 17, 2017

முருகன் ஸ்லோகங்கள்

 
கந்த புராணம்
மூவிரு முகங்கள் போற்றி
      முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
       ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
      மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
      திருக்கைவேல் போற்றி போற்றி



முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒரு கை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.



மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
      மனோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம் /
மஹீதேவ தேவம் மஹாவேதபாவம்
      மஹாதேவபாலம் பஜே லோகபாலம் //



ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
      பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
      சாடும் தனியானைச் சகோதரனே.



கந்தர் அநூபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
       மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
       குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.




கந்த புராணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க
      ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
       குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
        யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
        வாழ்க சீர் அடியாரெல்லாம்.




அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
      வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
      ‘முருகா!’ என்று ஓதுவார் முன்.”


கந்தர் அலங்காரம்
நாளென் செயும்வினை தானென்
      செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென்
      செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
      தண்டையுஞ்  சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு
     முன்னே வந்து தோன்றிடினே.




ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
      ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
      குன்றுருவவேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
       வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
        ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.

வேல் மாறல்
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை 
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
 ஒளிப்பிரபை வீசும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.



ஷண்முக காயத்ரீ 

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி/
தந்நஷ் ஷண்முக: ப்ரசோதயாத் //

அம்பாள் ஸ்லோகங்கள்


அம்பாள் ஸ்லோகங்கள்


அபிராமி அந்தாதி
நின்றும் இருந்தும் கிடந்தும்
     நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
     தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
     உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
     முத்தி ஆனந்தமே.




அபிராமி அந்தாதி
பூத்தவளே புவனம் பதி
      னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே
       கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா
       முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி
        மற்றோர் தெய்வம் வந்திப்பதே




இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
      என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
     சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
     பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்க்ஷி !




மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
       அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
       பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே.




ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
       பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
       சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.



அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
         கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
         கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
         தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
         தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
         துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
         தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
         ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
         அருள்வாய் அபிராமியே!


சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த:  ப்ரபவிதும்
       ந செதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது மபி
அதஸ் த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி ரபி
       ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி


அபிராமி அந்தாதி
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.


அண்ணபூர்ணா காயத்ரீ

ஓம் பகவத்யைச வித்மஹே மாஹேச்வர்யைச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்//


 ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே


ஸ்ரீ துர்கா காயத்ரீ

ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்.


சரஸ்வதி துதி

வெள்ளை கலையுடித்தி  வெள்ளை பணிபூண்டு
       வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
       சரியாசனம் வைத்த தாய்

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா.

புவனேஸ்வரி காயத்ரீ

ஓம் நாராயண்யை வித்மஹே புவனேஸ்வர்யை தீமஹி

தந்நோ தேவீ ப்ரசோதயாத்.





தேவி நமகம்

யாதேவீஸர்வ பூதேஷு ஸ்ம்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

மகாலட்சுமி ஸ்துதி 

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா

சிவன் ஸ்லோகங்கள்



சிவன் ஸ்லோகங்கள் 


மாசில் வீணையும்  மாலை மதியமும்
      வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
      ஈசன் எந்தை இணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
     நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
     நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.



திருமந்திரம்
சீவனோடொக்குந்  தெய்வந் தேடினுமில்லை
     அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
      தவனச் சடைமுடித் தாமரை யானே.



அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
       அன்பே சிவமாவ தாரு மறகிலார்
அன்பே சிவமாவ தாரு மறந்தபின்
        அன்பே சிவாமா யமர்ந்திருந்தாரே.



தோடுடைய செவியன் விடைஏறி
       ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
      என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
      பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
     பெம்மான் இவன் அன்றே.



வேண்டாத தக்க தறிவோய் நீ
        வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
         வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
          யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
           அதுவும் உன்தன் விருப்பன்றே.



பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
       பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
       உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
       கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       நமச்சிவாயத்தை நான் மறவேனே


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
      சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
      செந்துவர்வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே


திருமுறை
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
      சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
      சிவசிவ என்னச் சிவகதி தானே

காலை - பிணி போக்கும் | நண்பகல் - தனம் தரும் | மாலை - பாவம் போக்கும் | அர்த்தசாமம் - வீடுபேறு அளிக்கும் 



உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
       பெண் ஆகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலைம்முழ அதிரும்
        அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே.



நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்ற ண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க



சிவ காயத்ரீ

ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ர மூர்த்தியே தீமஹி
தன்னஸ் சிவ: ப்ரசோதயாத்.


ஸ்ரீ ருத்ர காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி/
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்//


நந்தி காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்


ஈஸ்வர தியானம்

ஓம் நம: சிவாய பரமேஸ்வராய  ஸஸி ஸேகராய நம:
ஓம் பவாய குண ஸம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்.



விஷ்ணு ஸ்லோகங்கள்

விஷ்ணு ஸ்லோகங்கள் 


திவ்ய பிரபந்தம் | தொண்டரடி பொடியாழ்வார் அருளி செய்த திருமாலை 
பச்சைமா மலைபோல் மேனி
     பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
    கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
     இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
      அரங்கமா நகருளானே.


நான்காந் திருமொழி
அச்சுதன் அமலன் என்கோ
       அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
        நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவை கட்டி என்கோ
        அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச் சுவை தேறல் என்கோ
         கனிஎன்கோ  பால் என்கேனோ.


ராம மந்திரம்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
       தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
       இம்மையே ராமா வென இவ்விரண்டெழுத்தினால்.


நாலாயிர திவ்ய பிரபந்தம் | திருமங்கை ஆழ்வார்
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
       படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பருளும்
       அருளோடு பெருநிலம்  அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
       தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
       நாராயணா என்னும் நாமம்.
                                                                                                                                     

விஷ்ணு சஹஸ்ரநாமம் (எண்ணிய காரியம் நிறைவேற)
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதந:


வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று.


சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
       விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யானகம்யம்
       வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.



ஸ்ரீ நிவாஸா கோவிந்தா ஸ்ரீ  வேங்கடேசா கோவிந்தா
திருப்பதிவாசா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரீநாதா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா சங்கடஹரணா கோவிந்தா
புராணபுருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷ கோவிந்தா



விஷ்ணு காயத்ரீ

நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி/
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் //

ஸ்ரீ ராம காயத்ரீ

ஓம் தாசரதாய  வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ காயத்ரீ

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ: ப்ரசோதயாத்.

ஹயக்ரீவ காயத்ரீ

ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்.

கருடன் காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபக்ஷய தீமஹி
தந்நோ கருட: ப்ரசோதயாத்.

விநாயகர் ஸ்லோகங்கள்


விநாயகர் ஸ்லோகங்கள்


சுக்லாம்பர தரம் விஷ்ணும்
     சசிவர்ணம் சதுர்ப் புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத்
     சர்வ விக்னோப சாந்தயே


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
     நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
     தப்பாமல் சார்வார் தமக்கு


கஜா நநம் பூத கணாதி ஸேவிதம்
      கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
      நமாமி விக்நேச் வர பாத பங்கஜம்


திருமந்திரம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின் றேனே


மூஷிக வாஹந மோதக ஹஸ்த
         சாமர கர்ண விலம்பித சூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
          விக்ந விநாயக பாத நமஸ்தே


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
        விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
        தன்மையினால்  கண்ணில்  பணிமின் கனிந்து.


வக்ர துண்ட மஹாகாய
      சூர்ய கோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
       ஸர்வ கார்யேஷு ஸர்வதா


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
       நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
       சங்கத் தமிழ் மூன்றும் தா.


ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
       கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
       ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ


“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
       தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
      கணபதியைக் கைதொழுதக் கால்.”


11 ஆம்  திருமுறை
திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பேருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை


கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
       கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பக எனவினை கடிதேகும்.


முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
        கலா தரவா தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம்
         நாதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம்.


ஸ்ரீ கணேச காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

சனிக் கிழமை

விநாயகர் 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
       கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பக எனவினை கடிதேகும்.


முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
        கலா தரவா தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம்
         நாதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம்.


முருகன் 

ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
      ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
      குன்றுருவவேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
       வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
        ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.

சிவன் 

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
       பெண் ஆகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலைம்முழ அதிரும்
        அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே.


நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்ற ண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க


அம்பாள் 

அபிராமி அந்தாதி
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

புவனேஸ்வரி காயத்ரீ
ஓம் நாராயண்யை வித்மஹே புவனேஸ்வர்யை தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்.

விஷ்ணு 

ஸ்ரீ நிவாஸா கோவிந்தா ஸ்ரீ  வேங்கடேசா கோவிந்தா
திருப்பதிவாசா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரீநாதா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா சங்கடஹரணா கோவிந்தா
புராணபுருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷ கோவிந்தா

கருடன் காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபக்ஷய தீமஹி
தந்நோ கருட: ப்ரசோதயாத்.


நவக்ரஹம் | சனி 

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.

சனி காயத்ரீ
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்.

சனி ஸ்துதி
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

வெள்ளிக் கிழமை

விநாயகர்

ஸ்ரீ கணேச காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

11 ஆம்  திருமுறை
திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பேருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

முருகன்

கந்தர் அலங்காரம்
நாளென் செயும்வினை தானென்
      செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென்
      செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
      தண்டையுஞ்  சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு
     முன்னே வந்து தோன்றிடினே.

சிவன்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
      சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
      செந்துவர்வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே

திருமுறை

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
      சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
      சிவசிவ என்னச் சிவகதி தானே

காலை - பிணி போக்கும் | நண்பகல் - தனம் தரும் | மாலை - பாவம் போக்கும் | அர்த்தசாமம் - வீடுபேறு அளிக்கும் 

அம்பாள்

அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
         கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
         கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
         தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
         தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
         துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
         தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
         ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
         அருள்வாய் அபிராமியே!


சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த:  ப்ரபவிதும்
       ந செதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது மபி
அதஸ் த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி ரபி
       ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி


விஷ்ணு

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று.

சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
       விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யானகம்யம்
       வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.

ஹயக்ரீவ காயத்ரீ
ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்.


நவக்ரஹம் | சுக்ரன்

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
     வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
     அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.

சுக்ர காயத்ரீ
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்.

சுக்ரன் ஸ்துதி
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்.

வியாழக் கிழமை

விநாயகர்

ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
       கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
       ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
       தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
      கணபதியைக் கைதொழுதக் கால்.”

முருகன்

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
      வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
      ‘முருகா!’ என்று ஓதுவார் முன்.”

சிவன்

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
       பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
       உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
       கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       நமச்சிவாயத்தை நான் மறவேனே


அம்பாள்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
       பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
       சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா

யாதேவீஸர்வ பூதேஷு ஸ்ம்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

விஷ்ணு

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ராகவேந்திரர்

ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.

ஆஞ்சநேயர்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
        அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில்
        அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

குரு 

குருர்ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர்தேவோ மஹேச்வர:
குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

குணமிகு வியாழ குரு பகவானே
      மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
      க்ரஹதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!

குரு காயத்ரீ
ஓம்வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாயதீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.

குரு ஸ்துதி
தேவானாஞ் ச ரிக்ஷீணாஞ் ச குரும்காஞ்சன ஸந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

Saturday, September 16, 2017

புதன் கிழமை

விநாயகர்

வக்ர துண்ட மஹாகாய
      சூர்ய கோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
       ஸர்வ கார்யேஷு ஸர்வதா

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
       நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
       சங்கத் தமிழ் மூன்றும் தா.


முருகன்

கந்த புராணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க
      ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
       குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
        யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
        வாழ்க சீர் அடியாரெல்லாம்.


சிவன்

வேண்டாத தக்க தறிவோய் நீ
        வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
         வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
          யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
           அதுவும் உன்தன் விருப்பன்றே.

நந்தி காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

அம்பாள்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
       அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
       பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே.

சரஸ்வதி துதி
வெள்ளை கலையுடித்தி  வெள்ளை பணிபூண்டு
       வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
       சரியாசனம் வைத்த தாய்

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா.


விஷ்ணு

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
       தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
       இம்மையே ராமா வென இவ்விரண்டெழுத்தினால்.

ஸ்ரீ ராம காயத்ரீ
ஓம் தாசரதாய  வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் (எண்ணிய காரியம் நிறைவேற)
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதந:

நவக்ரஹம் | புதன்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
       புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தருள்வாய் பண்ணொலியானே
       உதவியே யருளும் உத்தமா போற்றி.

புத காயத்ரீ
ஓம் கஜ த்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

புத ஸ்துதி
ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்
ஸௌம்யம் சௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.

செவ்வாய்க் கிழமை

விநாயகர் 

மூஷிக வாஹந மோதக ஹஸ்த
         சாமர கர்ண விலம்பித சூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
          விக்ந விநாயக பாத நமஸ்தே


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
        விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
        தன்மையினால்  கண்ணில்  பணிமின் கனிந்து.

முருகன்

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
      பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
      சாடும் தனியானைச் சகோதரனே.

கந்தர் அநூபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
       மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
       குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சிவன்

தோடுடைய செவியன் விடைஏறி
       ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
      என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
      பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
     பெம்மான் இவன் அன்றே.


சிவ காயத்ரீ
ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ர மூர்த்தியே தீமஹி
தன்னஸ் சிவ: ப்ரசோதயாத்.


அம்பாள்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
      என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
     சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
     பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்க்ஷி !

ஸ்ரீ துர்கா காயத்ரீ
ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்.


விஷ்ணு

நாலாயிர திவ்ய பிரபந்தம்
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
       படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பருளும்
       அருளோடு பெருநிலம்  அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
       தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
       நாராயணா என்னும் நாமம்.
                                                                                                                                       (திருமங்கை ஆழ்வார்)

ஸ்ரீ ந்ருஸிம்ஹ காயத்ரீ
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ: ப்ரசோதயாத்.


செவ்வாய்

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
      குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
     அங்காரகனே அவதிகள் நீக்கு

அங்காரக காயத்ரீ
ஓம் வீரத்வஜாய வித்மஹேவிக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்.

அங்காரக ஸ்துதி
தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம்சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்

திங்கட் கிழமை

விநாயகர்

கஜா நநம் பூத கணாதி ஸேவிதம்
      கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
      நமாமி விக்நேச் வர பாத பங்கஜம்


திருமந்திரம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின் றேனே

முருகன் 

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒரு கை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.


மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
      மனோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம் /
மஹீதேவ தேவம் மஹாவேதபாவம்
      மஹாதேவபாலம் பஜே லோகபாலம் //


சிவன் 

திருமந்திரம்
சீவனோடொக்குந்  தெய்வந் தேடினுமில்லை
     அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
      தவனச் சடைமுடித் தாமரை யானே.

அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
       அன்பே சிவமாவ தாரு மறகிலார்
அன்பே சிவமாவ தாரு மறந்தபின்
        அன்பே சிவாமா யமர்ந்திருந்தாரே.

ஈஸ்வர தியானம்
ஓம் நம: சிவாய பரமேஸ்வராய  ஸஸி ஸேகராய நம:
ஓம் பவாய குண ஸம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்.


அம்பாள் 

அபிராமி அந்தாதி
பூத்தவளே புவனம் பதி
      னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே
       கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா
       முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி
        மற்றோர் தெய்வம் வந்திப்பதே

 ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே


விஷ்ணு

நான்காந் திருமொழி
அச்சுதன் அமலன் என்கோ
       அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
        நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவை கட்டி என்கோ
        அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச் சுவை தேறல் என்கோ
         கனிஎன்கோ  பால் என்கேனோ.

ராம மந்திரம்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.


சந்திரன்

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.

சந்திர காயத்ரீ 
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்

சந்திர ஸ்துதி
ததிசங்க துஷாராபம் க்ஷிரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் முகுடபூஷணம்



ஞாயிற்றுக்கிழமை

விநாயகர்

சுக்லாம்பர தரம் விஷ்ணும்
     சசிவர்ணம் சதுர்ப் புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத்
     சர்வ விக்னோப சாந்தயே


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
     நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
     தப்பாமல் சார்வார் தமக்கு


முருகன் 

கந்த புராணம்
மூவிரு முகங்கள் போற்றி
      முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
       ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
      மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
      திருக்கைவேல் போற்றி போற்றி

ஷண்முக காயத்ரீ 
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி/
தந்நஷ் ஷண்முக: ப்ரசோதயாத் //


சிவன் 

மாசில் வீணையும்  மாலை மதியமும்
      வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
      ஈசன் எந்தை இணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
     நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
     நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

ஸ்ரீ ருத்ர காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி/
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்//


அம்பாள்

அபிராமி அந்தாதி

நின்றும் இருந்தும் கிடந்தும்
     நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
     தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
     உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
     முத்தி ஆனந்தமே.

அண்ணபூர்ணா காயத்ரீ

ஓம் பகவத்யைச வித்மஹே மாஹேச்வர்யைச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்//

விஷ்ணு

திவ்ய பிரபந்தம் | தொண்டரடி பொடியாழ்வார் அருளி செய்த திருமாலை 

பச்சைமா மலைபோல் மேனி
     பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
    கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
     இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
      அரங்கமா நகருளானே.


விஷ்ணு காயத்ரீ

நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி/
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் //

சூரியன்

சீலமாய்ல் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

ஸூர்ய காயத்ரீ

ஓம் அச்வ த்வஜாயவித்மஹே பாஸஹஸ்தாய தீமஹி/
தந்நஸ் சூர்ய: ப்ரசோதயாத் //

ஸூர்ய ஸ்துதி

ஜபா குஸூமஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி  திவாகரம்