Sunday, September 17, 2017

அம்பாள் ஸ்லோகங்கள்


அம்பாள் ஸ்லோகங்கள்


அபிராமி அந்தாதி
நின்றும் இருந்தும் கிடந்தும்
     நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
     தாள் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
     உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
     முத்தி ஆனந்தமே.




அபிராமி அந்தாதி
பூத்தவளே புவனம் பதி
      னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே
       கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா
       முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி
        மற்றோர் தெய்வம் வந்திப்பதே




இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
      என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
     சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
     பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்க்ஷி !




மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
       அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
       பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே.




ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
       பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
       சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.



அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
         கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
         கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
         தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
         தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
         துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
         தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
         ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
         அருள்வாய் அபிராமியே!


சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த:  ப்ரபவிதும்
       ந செதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது மபி
அதஸ் த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி ரபி
       ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி


அபிராமி அந்தாதி
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.


அண்ணபூர்ணா காயத்ரீ

ஓம் பகவத்யைச வித்மஹே மாஹேச்வர்யைச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்//


 ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே


ஸ்ரீ துர்கா காயத்ரீ

ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்.


சரஸ்வதி துதி

வெள்ளை கலையுடித்தி  வெள்ளை பணிபூண்டு
       வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
       சரியாசனம் வைத்த தாய்

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா.

புவனேஸ்வரி காயத்ரீ

ஓம் நாராயண்யை வித்மஹே புவனேஸ்வர்யை தீமஹி

தந்நோ தேவீ ப்ரசோதயாத்.





தேவி நமகம்

யாதேவீஸர்வ பூதேஷு ஸ்ம்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

மகாலட்சுமி ஸ்துதி 

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா

No comments:

Post a Comment