திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.
திருப்பல்லாண்டு தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்த
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
பாண்டிய பட்டர் அருளிச் செய்த
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழி அறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
திருப்பல்லாண்டு பாசுரம் - 1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா*
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு
திருப்பல்லாண்டு பாசுரம் - 2
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
திருப்பல்லாண்டு பாசுரம் - 3
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல்* வந்துமண்ணும் மணமும் கொண்மிண்*
கூழாட்பட்டு நின்றீர்களை* எங்கள் குழுவினில் புகுத லொட்டோம்*
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள்* இராக்கதர் வாழ்* இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப்* பல்லாணடு கூறுதுமே
திருப்பல்லாண்டு பாசுரம் - 4
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து* எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி* வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய* நமோநாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்* வந்து பல்லாணடு கூறுமினே
திருப்பல்லாண்டு பாசுரம் -5
அண்டக்குலத்துக் கதிபதியாகி* அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த* இருடிகேசன் தனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது* ஆயிரநாமம் சொல்லிப் *
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து* பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மினே
திருப்பல்லாண்டு பாசுரம் - 6
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி* அரியை யழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாணடு* பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு பாசுரம் - 7
தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி* திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று* குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை* ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாயச்* சுழற்றிய ஆழிவல்லானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே
திருப்பல்லாண்டு பாசுரம் - 8
நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு* காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து* என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே
திருப்பல்லாண்டு பாசுரம் - 9
உடுத்துக்* களைந்தநின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன* சூடுமித் தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்* திருவோணத் திருவிழவில்*
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே
திருப்பல்லாண்டு பாசுரம் - 10
எந்நாள் எம்பெருமான்* உன்தனக்கு அடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில்* வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித்* திருமதுரையிற் சிலைகுனித்து* ஐந்தலைய
பைநாகத் தலைப் பாய்ந்தவனே* உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
திருப்பல்லாண்டு பாசுரம் - 11
அல்வழக்கு ஒன்றும் இல்லா* அணி கோட்டியர் கோன்* அபிமான துங்கன்
செல்வனைப் போலத்* திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல் வகையால் நமோ நாராயணா என்று* நாமம் பல பரவி*
பல்வகையாலும் பவித்திரனே!* உன்னைப் பல்லாண்டு கூறுவனே
திருப்பல்லாண்டு பாசுரம் - 12
பல்லாண்டென்று பவித்திரனைப்* பரமேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை* வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார்* நமோநாராயணாய என்று*
பல்லாண்டும் பரமாத்மனைச்* சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
No comments:
Post a Comment